வேலை விண்ணப்பத்துக்கு முட்டிமோதிய கூட்டம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெறச் சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்காக நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று (24) காலை முதல் திரண்டனர்.
இதன்போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் வருகையைத் தொடர்ந்து சுமூக நிலையை அடைந்தது.
இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப் படிவங்களை சீராக வழங்குவதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இன்று மாத்திரம் ஏறத்தாழ 1500 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments