கஞ்சாவுடன் பெண் அதிரடி கைது!

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதயக கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைத்த பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறித்த பெண்னை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது 2 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் கிளிநொச்சியை சேந்தவர் என தெரியவந்துள்ளது என்று பளை பொலிஸார் கூறினர்.

No comments