தாக்குதல் வதந்தி- டக்ளஸ் மறுப்பு

வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்க இணைப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது, வெறுமனே செய்தியே ஒழிய, உறுதியான தகவல்கள், ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது கட்சி ஆதரவாளர்கள் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராகத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
வவுனியா வாடி வீட்டில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments