ரயில் மோதி இளைஞன் பலி

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதி நேற்று (26) இரவு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர நிலையத்திற்கு இடைப்பட்ட புகையிர கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாட்டு கேட்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த ஜெய்கப்ஜோன் ஜோன்சன் (வயது-19) என்ற இளைஞனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

No comments