சில்லறைகளினை பொருட்டுத்த தேவையில்லை?


பிரதமராக இருக்கின்ற மஹிந்தராஜபக்ச மௌனமாகவே இருக்கின்றார். ஒரு சில கருத்துக்களைக் கூறுகிறார்.அதேபோல் தான் ஜனாதிபதி கோத்தாவும் ஒரு சில கருத்துக்களைக் கூறுகின்றார். இடையில் இருக்கின்ற சில்லறைகள் தான் பலவித கருத்துக்களைக் கூறுகின்றார்கள். நாங்கள் பல விடயங்களையும் அவதானிக்கின்ற நிலையில், தான் இருக்கவேண்டும். அவசரப்பட்டு எதிர்க்கருத்துக்களைக்கூறி அதுவே தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு மதவாதிகளுக்கு தீனிபோட்டு இரையாகக்கூடாது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் .

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதித்தேர்தலில் ஏற்பட்ட நிலைமைகள் அனைவருக்கும் புரியும் .எனவே அரச தரப்பிலுள்ளவர்களுடன் அரசியல் புரிந்துணர்வு வருகின்றவரை அமைதியாக இருப்பதே சிறந்தது என்றார்.

No comments