ஈரான் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை - டிரம்ப்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது என்றார். ஈரானுக்கு எதிராக இராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தார். ஈரான் தனது ஆணு ஆயுத கனவை கைவிட வேண்டும். நான் அதிபராக இருக்கும்வரை ஈரான் அணு அயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும்.

No comments