ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பை கோரினார் சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று (25) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை குறித்த குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்தனர்.

இடம்பெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு அவசியத்தினையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

No comments