பிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்

டவுனிங் வீதியில்  அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.

அடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வழி வகுக்கும் வரலாற்று உடன்படிக்கைக்கு தனது பெயரை வைத்த பின்னர் பிரதமர் நாட்டிற்கு ஒரு "அருமையான தருணம்" என்று கூறினார்.

பிரெக்சிட் விவகாரத்தினால் எழுந்த பல ஆண்டுகால வாதங்கள் மற்றும் பிளவுகளை இது முடிவுக்குக் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments