சட்டவிரோத மீன்பிடி; இந்தியர்கள் 8 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (31) அதிகாலை, கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை திருகோணமலை மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களின் சுகாதாரம் தொடர்பாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments