1000 ரூபாய் விவகாரம்; முரண்டுபிடிக்கும் கம்பனிகள்

உடனடியாக 1000 ரூபாய் வழங்க முடியாது என்று பெருந்தோட்டக் கம்பனிகள் அரசிடம் தெரிவித்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில், தோட்ட கம்பனிகளுடன் பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் இன்று (20) கலந்துரையாடல் இடம்பெற்றது.

23 பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பத்தரண குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உடனடியாக 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத நிலை நிலவுவதாக பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் உள்ளிட்ட ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் இதன்போது அரசாங்க தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதானிகளுக்கும் இடையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது என அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறினார்.

இந்தக் கலந்துரைடலின்போது பெருந்தோட்டக் கைத்தொழில் துறையின் உற்பத்தித் திறனை அதிகரித்து மக்களுக்கு இலாபத்தை பகிர்ந்தளிக்ககூடிய திட்டமொன்று தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

No comments