இலங்கையர்களிற்கு தடையின்றி சுவிஸ் விசா?


இலங்கையர்களிற்கான விசா அனுமதி நிறுத்தப்படவில்லையென கொழும்பிலுள்ள அந்நாட்டு தூதுவராலயம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பங்களை ஏற்பதனை சுவிஸ் தூதரகம் நிறுத்தவில்லை என்பதை நினைவில் கொளள கோரியுள்ள தூதரகம் வழமை போலவே விசா கோரிக்கைகள் சட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்தப்படுகின்றன, அவை சுவிஸ் தூதரக அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான செயல்முறையின் வழியாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுவிஸ் தூதரக பெண் பணியாளர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை அரசு தடை விதித்துள்ள நிலையில் சுவிஸ் அரசு இலங்கையர்களிற்கான விசா அனுமதியை இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments