ஜனாதிபதி செயலக பிரதானியின் இலஞ்ச வழக்கு; தீர்ப்பு திகதி

ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான தீர்ப்பு டிசம்பர் 19 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பகுதிகளை (இரும்பு), இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பாக அந்நிறுவனத்திடமிருந்து 54 கோடி ரூபாய் இலஞ்சம் கோரியதாகவும், அதற்கான முற்பணமான 2 கோடி ரூபாயை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெற்றுக் கொள்ள முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்களை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கடந்த ஆண்டு மே 03 ஆம் திகதி, குறித்த ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments