உலக அழகுத் திருமதியாக இலங்கையின் கராேலினா

2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதி (MRS World) பட்டத்தை இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி சுவீகரித்துள்ளார்.

அமெரிக்கா - லொஸ் வேகாஸில் நடந்த இந்தப் போட்டியில் 51 பேர் கலந்து கொண்டனர். இதில் முதலிடத்தை பிடித்த கரோலின் உலக அழகுத் திருமதியாக முடிசூடினார்.

முன்னதாக அவர் இலங்கை அழகுத் திருமதியாக முடிசூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நடிக்கையும் இப்போதைய கொழும்பு மாநகர சபை மேயருமான ரோஷி சேனாநாயக்க 1984ம் ஆண்டு உலக அழகுத் திருமதியாக முடிசூடியிருந்தார்.

இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மற்றுமொரு இலங்கையராக கரோலின் முடிசூடியுள்ளார்.

No comments