பொலிஸ் நிலையத்துக்குள் துப்பாக்கி சூடு!

கம்பஹா - ஜா எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments