மன்னாரில் பல ஏக்கர் பெரும்போகம் அழிவு

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 5,653 ஏக்கர் பெரும் போக நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளது.

குறித்த தகவலை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் ன்னார் மாவட்டத்தில் உள்ள 12 கமநல சேவைகள் நிலையங்களில் உள்ள சகல குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ள பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை 5,653 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதோடு மேலதிக விபரம் ஒரு வாரங்களில் சமர்ப்பிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments