இந்தியா செல்லும் பெண்களுக்கு அமெரிக்க, இங்கிலாந்து எச்சரிக்கை!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில்.உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாகக்  கூறப்பட்டு வருகிறது. 

எனவே இந்தியாவுக்கு வரும் பெண் பயணிகளுக்கு வெளிநாட்டு அரசுகள் எச்சரிக்கை அளிக்கிறது.
இங்கிலாந்து நாட்டு அரசின் இணைய தளத்தில் இந்திய நாட்டுக்கு வரும்  பெண்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.   அத்துடன் இந்தியா வரும் பெண்களுக்கு பாலியல் குற்றம் இழைக்கப்பட்டால் அவர்கள் காவல்துறையிடம் இருந்து இது குறித்து அறிக்கை பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க சுற்றுலாத்துறை இந்தியாவில் உள்ள பல இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு இரண்டாம் நிலையில் உள்ளதாக அறிவுரை அளித்துள்ளது.   இதனால் இந்தியாவுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பயணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது பலாத்காரம், பெண்கள் மீது பாலியல் சீண்டல், வன்முறைகள் பல சுற்றுலா நகரங்களில் நடந்து வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


No comments