வவுனியாவில் 253 குடும்பங்கள் பாதிப்பு

வவுனியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தற்போது நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் பெரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் 05 மேலதிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரதேச செயலகங்கள் வழங்கி வருகின்றன.

No comments