நகைச்சுவையாக எண்ணியிருக்க கூடாது; குண்டு தாக்குதல் குறித்து சாட்சியம்

நாட்டின் பாதுகாப்பு சபை மற்றும் பிற தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் தகவல் கிடைத்ததிலிருந்து கடுமையான விவகாரத்தை நகைச்சுவையாக எடுக்காமல் வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னால் நேற்று சாட்சியமளித்தார்.

மேலும்,

குண்டுவெடிப்புகள் நடைபெறுவதற்கு முன்னர், பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நான்கு முறை அறிவித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் என்னிடம் தெரிவித்தது.

தலைமைத்துவத்தில் பலவீனம் காணப்பட்டதை சம்பவ காலத்தில் நாங்கள் தெளிவாக அவதானித்தோம் - என்றார்.

கடந்த அரசு வழங்கிய இழப்பீடு குறித்து விளக்கமளித்த அவர், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதன் மூலம் அவர்கள் தமது கைகளை கழுவுவது போல் தோன்றியது. - என்றார்.

மேலும் நாட்டின் உளவுத்துறையை அரசியல்மயமாக்கக் கூடாது. நாட்டில் இந்த வகையான சூழ்நிலைகளைக் கையாள ஒரு சுயாதீன அமைப்பு இருக்க வேண்டும்.

பிற நாடுகளில் பல முக்கிய உளவுத்துறை சேவைகள் உள்ளன, குறிப்பிட்ட நாட்டில் அரசாங்கம் மாறிய பின் அவை மாறாது இருக்கும். அரச புலனாய்வு சேவையை கையாளும் போது அரசியல் தலையீடு நிறுத்தப்பட வேண்டும்.

நாட்டின் அனைத்து மத நடவடிக்கைகளையும் தனி அமைச்சுக்களாகப் பிரிக்காமல் நிர்வகிக்க ஒருவழி அமைச்சு மட்டும் இருக்க வேண்டும்.

ஒரு அரசியல் கட்சிக்கு இனம் அல்லது மதம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, எங்களிடம் பல தேசிய அரசியல் கட்சிகள் உள்ளன. மதம் அல்லது இனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி இருந்தால், அது நாட்டிற்கு மிக மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அந்த வகையான கட்சிகளை தடை செய்வதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

பாடசாலை மாணவர்கள் ஒவ்வொரு மதத்தையும் பற்றி கற்றுக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் தங்கள் பிரதான மதத்தை பிரதானமாகக் கொள்ள வேண்டும், அந்த வகையில் மாணவர்கள் நாட்டின் ஒவ்வொரு நபருடனும் தங்கள் சமூக ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மேற்கூறிய கருத்தை பிற மத பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது நாட்டின் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கான மிகவும் சாத்தியமான வழி என்று நான் நம்புகிறேன். - என்றார்.

(டெய்லி மிரர் : மொழிபெயர்ப்பு)

No comments