பல கோடி பெறுமதியான சிகரெட்களுடன் இருவர் சிக்கினர்

வெளிநாட்டில் இருந்து ஒரு தொகை சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்த முற்பட்ட இருவரை இன்று (03) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

றாகமை, அங்கொடை பகுதியைச் சேர்ந்த 20 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 123 பக்கட்டுகளில் 25 ஆயிரத்து 720 வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டது. அதன் பெறுமதி 22 கோடியே 80 இலட்சம் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments