யாழ் விபத்தில் எண்மர் காயம்

வீதி புனரமைப்பு வேலைகளுக்காக தார் பரல்களை ஏற்றி சென்ற உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த எட்டு தொழிலாளிகளில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஏனைய ஆறு பேரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பொன்னாலை சந்தியில் இன்று (31) காலை 8.45 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வீதியில் இருந்து பொன்னாலை சந்தி வழியாக காரைநகர் வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்ப முயன்றபோது , உழவு இயந்திரத்தில் இருந்து அதன் பெட்டி தனியாக கழன்று தடம் புரண்டது.

இந்த விபத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவர்களான மு.நாகமுத்து (வயது-65), பல்லசுட்டியைச் சேர்ந்த வ.வசிகரன் (வயது-34), ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த மா.ஸ்ரீவானந்தம் (வயது-45), நா.றஞ்சன் (வயது-41), வ.தினுஜன் (வயது-18), ரா.தபுசன் (வயது-21), வ.பசுங்கிளிராசா (வயது-63) மற்றும் எஸ்;.துஜிபன் (வயது-20) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

No comments