டேமினேட்டர் பதவியேற்பு ஊடக சுதந்திரத்தை பாதிக்கிறது

கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற இரு வார காலத்தின் பின்னர் தேடுதல்கள், விசாரணைகள், அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் முடிவிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டேர்மினேட்டர் என அழைக்கப்படும் கோத்தாபய இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது என்றும் எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments