பிரித்தானியாவில் நடைபெறுகிறது பாராளுமன்ற வாக்குப்பதிவு

பிரித்தானியாவில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள  நடைபெறுகிறது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அநேகமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவுகள் தெரிந்துவிடும். 

முடிவுகள் அனைத்தும் வெளியானபின்னர், வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும்.

இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் பிரதானமான கட்சிகளான கன்சர்வேடிவ், லேபர் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

பிரச்சார காலத்தின் வெளியான கருத்துகணிப்புகளில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியே தொழிற் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 புள்ளிகள் அதிகமாக பொதுமக்கள் ஆதரவைப் பெற்று முன்னிலை வகித்ததாக தெரியவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொதுத்தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments