வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் இன்று 5.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் முடிவுகள் இரவு 10 மணிக்கு முன்பாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார்.

No comments