வடக்கும் கண்டம் தாண்டியது?

போரின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டம் முதன் முதலாக 70 சதவீத வாக்களிப்பைத் தாண்டுகின்றது.

யாழ்ப்பாணத்தின் வாக்குப் பதிவு பி.ப. 4 மணி வரை 65 சதவீதம். இதனுடன் யாழ்ப்பாண மாவட்டத்துக்குரிய தபால்மூல வாக்களிப்பு வீதம் 4 சதவீதத்தைக் கூட்ட வேண்டும். இதனிடையே வவுனியா 72 விழுக்காடு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று பல தரப்பினர்களும் குரல் கொடுத்தும், யாழில் 2015 ஆம் ஆண்டு 66.28 % (529,239 வாக்காளர்களில் 350,789 பேர் வாக்களிப்பு.) வாக்களிப்பே நடைபெற்றது.

ஆனால் இன்று மாலை 4 மணிக்கு முன்னர் 68 வீத வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் யாழில் அதி கூடிய வாக்கு பதிவான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

No comments