புதுக்குடியிருப்பில் சந்தேகத்தில் கைது?

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தியில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நால்வரை, நேற்று (15) இரவு புதுக்குடியிருப்புப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை, ஆனைக்கோட்டை, மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனவும்  இவர்களின் இருவர் ஏற்கெனவே குற்றம் இழைத்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments