குடும்பத்திற்கு உரிமையில்லை:சஜித்!


தனது குடும்பத்தவர்களிற்கு அமையவுள்ள அரசில் பதவிகளை வழங்கப்போவதில்லையென சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

குடும்ப தலையீடு இல்லாத ஜனநாயக ஆட்சியொன்றை கட்டியெழுப்பவுள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

'இன்று சுதந்திரமாக கூட்டங்களை நடத்த முடிகின்றது. மனதில் உள்ள கருத்துக்களை அச்சமின்றி முன்வைக்க முடிகின்றது. சற்று பின்னோக்கி பாருங்கள். இவ்வாறான ஒரு நிலையா அன்று காணப்பட்டது?

ஒரு குடும்பத்திடம் ஆட்சி அதிகாரங்கள் குவிந்திருந்தன.  அவ்வாறான ஒரு யுகத்துக்கு மீண்டும் திரும்புவதாக நாட்டின் எதிர்பார்ப்பு? நான் ஒன்று உறுதியாக இந்த இடத்தில் கூறுகின்றேன். எனது ஆட்சியில் பிரேமதாச குடும்பத்தின் எந்தவொருவருக்கும் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று உறுதியளிக்கின்றேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments