சொன்னதை செய்தேன்; அரசியல் பழிவாங்கல் கிடையாது

எனது ஆட்சியில் அரசியல் ரீதியில் திட்டமிடப்பட்ட கொலைகள், அரசியல் பழிவாங்கல்கள் இருக்கவில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16) இரவு ஆற்றிய தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும்,

நான் வழங்கிய கருத்து சுதந்திரம் என்னை விமச்சிக்க தவறாக பயன்படுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் உள்ளக மோதல் சில முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் அரசை தடுத்தது.

நான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என உறுதியளித்தேன். அதனை நிறைவேற்றியுள்ளேன் - என்றார்.

No comments