கோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் - சேனாதி

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாச தோல்வியடைந்துள்ள நிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நிலைப்பாடு குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்த்துதான் சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளித்தனர் என்றும் மக்களின் அவ்வாறான கோரிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டு அவை தொடர்பாக ஆராய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments