தமிழருக்கு கோத்தாபய தீர்வை வழங்க வேண்டும்

தமிழர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்திசெய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் நீண்டகால யுத்தம் மற்றும் அரசியல் ரீதியான போராட்டங்களின் வெளிப்பாடுகளினால் இதுவரையில் தமது அரசியல் ரீதியான வெற்றியை பெறமுடியாத நிலையில் தமக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை இந்த நாட்டு அரசுகள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.

ஓன்றுபட்ட நாட்டுக்குள் அனைத்து இன மக்களுடனும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதுடன், தமது பகுதியை தாமே ஆளவேண்டும் என்பதற்கான தொடர்ச்சியான அங்கீகாரத்தினையும் கோரிக்கையினையும் தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இந்நாட்டில் ஆட்சிபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் புறந்தள்ளியே வருகின்றனர்.

எனவே புதிய ஜனாதிபதியாவது தமிழ் மக்களின் இந்த நீண்டகால நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். - என்றார்.

No comments