நாமலையும் சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!



கொழும்பில் சீன சார்பு ஆட்சிபீடம் கதிரையேறியுள்ள நிலையில் இந்திய உளவு கட்டமைப்பு முழுஅளவில் கொழும்பை வசப்படுத்த பாடுபடத்தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் புதிய ஜனாதிபதி கோத்தபாயவை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த கட்ட சந்திப்புக்களை ஆரம்பித்துள்ளார்.

இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஷ ஆகியோரை சந்தித்து பேச்சுக்களை அவர் நடத்தியுள்ளார்.

இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பினரை சந்திப்பாராவென்பது உறுதியாகவில்லை.

No comments