தனது பாதுகாப்பு குறித்து கோத்தா விடுத்த உத்தரவு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தான் வீதியில் பயணிக்கும் வீதிகளை மூட வேண்டாம் என்று தனது பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தமது பாதுகாப்பு படையின் வாகனங்களை நான்காக கட்டுப்படுத்துமாறும், பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து கமாண்டோக்களை எடுத்துக் கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, போதைப் பொருட்கள் மற்றும் பாதாள கோஷ்டியினரை கட்டுப்படுத்தும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நேற்று (19) இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை சந்தித்த போது இதுபற்றி ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments