விடைபெற்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு இதனை  தெரிவித்துள்ளது.
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments