கோத்தா அழைத்தே சென்றேன்: ஹிஸ்புல்லா!


புதிய ஜனாதிபதி கோட்டாபயவின் பதவியேற்பு விழாவில் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தாம் கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பங்கெடுத்தமை பலத்த வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்த அவர் கோத்தாவின் பதவியேற்பில் பங்கெடுத்தமை தொடர்பிலேயே அழைப்பில் பங்கெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு நல்லதொரு பாடம் .சனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் இல்லை என்ற செய்தியை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியிள்ளது. இதனை அவர்கள் இனிமேல் புரிந்துகொள்ளவேண்டும். அதேவேளை கூட்டமைப்பினரின் கோரிக்கைகளையும் மீறி எங்களுக்கும் வடகிழக்கில் குறிப்பிட்டளவு வாக்குகளை மக்கள் போட்டுள்ளனர் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments