பதவியேற்போடு தொடங்கியது கோத்தா ஆதரவாளர்கள் ஆட்டம்!


சிறிலங்காவின் சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக  சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு மலையகம் கேகாலை எட்டியாந்தொட்ட பிரதேசத்தில் கனேபொல எனும் இடத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று நேற்று  நடத்தப்பட்டுள்ளது . இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட தகவல் படி இது கோத்தா ஆதரவாளர்களாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் கருதுகின்றனர். நடந்து முடிந்த தேர்தல் மலையகம் வடகிழக்கு மக்கள் சஜித் பிரேமதாசாவுக்கே அதிகமான வாக்கு செலுத்தியிருந்தமை குறிப்படத்தக்கது.

No comments