தற்றுணிவு அதிகாரத்தின் அடிப்படையில்தப்பி பிழைத்தது?

யாழ்.மாநகரசபையின் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று காலை நடைபெற்றது. யாழ்.மாநகரசபையின் பாதீடு அங்கீகரித்தல் தொடர்பான கூட்டம் இன்று காலை 9 மணிக்கு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந்தும் நளின பிருதிலாலும் தலைமறைவாகினர். அவர்கள் கூட்டத்துக்குச் சமுகமளிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்களும் கூட்டத்துக்குச் சமுகமளிக்கவில்லை. வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.


ஆயினும் முதல்வர் தனக்கு வழங்கப்பட்டுள்ள மாநகர கட்டளைச்சட்டத்தின் படி உள்ள தற்றுணிவு அதிகாரத்தின் அடிப்படையில் பாதீட்டை நிறைவேற்றியுள்ளார்.


No comments