இலங்கைக்கு தங்கம் கடத்திய 14 பேர் அதிரடி கைது

சென்னையிலிருந்து இலங்கைக்குள் தங்க நகைகளை கடத்த முயன்ற 14 இலங்கையர்கள், கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4.7 கிலோகிராம் தங்க நகைகளை இந்தியாவிலிருந்து கடத்தி வந்தனர் எனவும் இவற்றின் பெறுமதி 3.197 கோடி ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 7.30 மணியளவில் சென்னையிலிருந்த வந்த இந்தியன் எயார்லைன்ஸ் ஏ.ஐ.273 விமானத்தில் மேற்படி நபர்கள் இந்த நகைகளை கடத்தி வந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments