இணைய நிதிமோசடிகள் குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் இணையம் ஊடாக நிதிமோசடிகள் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்போர் தமது கணக்கு இலக்கங்களை யாருடனும் பகிரவேண்டாம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் தொடர்பாகவும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய வங்கி கோரியுள்ளது.

இலகுவழி கடன் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments