வாழ்த்தினார் சம்பந்தர்:ஆனாலும் அழைப்பில்லை!


இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொலைப்பேசி உரையாடலின்போது, இன்று பதவியேற்கிறேன் என கோட்டாபய  கூறியதாகவும் ஆனாலும்  இரா.சம்பந்தன் நிகழ்விற்கு வர வேண்டுமென  அவர் அழைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

No comments