கோத்தா பயம்:தப்பியோடும் சிங்களம்!


ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) உயர் போலீஸ் அதிகாரி நிசாந்தா சில்வா இன்று (24) பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய விசாரணை வழக்குகளில் ஈடுபட்டிருந்தார்.

இன்று பிற்பகல் 12.50 மணியளவில் நிசாந்தா சில்வா தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு சுவிட்சர்லாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாய தலைமையிலான அரசாங்கத்தால் பழிவாங்கப்படலாம் என்பதாலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் , சுவிற்சர்லாந்து அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவருகின்றது.

ஏற்கனவே கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பிய பேராசிரியர் ஒருவரும் தப்பித்து  நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments