கிழக்கை ஆள தமிழ் ஆளுநர் வேண்டும்; ஈமபுவி

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் நிலையில்  தமிழர் ஒருவரையே ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலையின் சிரேஸ்ட உறுப்பினரான ரா. துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதற்காக முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ எதிர்காலத்தில் வடகிழக்கில் உள்ள சிறுபான்மையினம் தொடர்பாக   தனது, இணக்கப்பாடான அரசியலை முன்வைக்கவேண்டும் - என்றார்.

No comments