தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் வழங்குவேன்: சஜித் அதிரடி அறிவிப்பு

நல்ல இதயம் உள்ள, மக்களின் கஸ்டங்களை உணர்ந்த ஜனாதிபதி ஒருவரே இந்நாட்டுக் தேவை. நான் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் சம்பளத்தை உயர்த்தி 1500 ரூபாய் வழங்குவேன் என உறுதியளிக்கிறேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொத்மலை இன்று (20) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

மறைந்த தலைவர் காமினி திசாநாயக்காவின் பிறந்த தினத்தில் கொத்மலை நகரில் மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். காமினி திசாநாயக்க அவர்களின் புதல்வர்களான நவீன் திசாநாயக்க, மயந்த திசாநாயக்க ஆகியோரின் சக்தியில் சக்தி மிக்க புதிய நாட்டை உருவாக்குவேன்.

இன்று நாட்டுக்கு தேவை எறும்பை போல் பயணித்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய தலைவராக செயற்படுவது. எனக்கு வயது 52, நவீன் திசாநாயக்கவுக்கு வயது 50 நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய ஆட்டம் இழக்காதவர்களாக இருக்கின்றோம். சிலர் 80 வயதை எட்டியுள்ளனர். அவர்கள் தாமாகவே வீட்டுக்கு செல்ல வேண்டும். நாட்டை புதிய பாதையில் கொண்டு சென்று அபிவிருத்தியை செய்வதற்கான வயது எம்மிடம் உண்டு. காலாவதியாகியவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக போட்டி போடுவது அர்த்தம் இல்லை.

பொதுமக்களின் சக்தியினை புதிய ஒரு நாட்டினை உருவாக்குவேன். தேயிலை தொழிலை முன்டனெடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாதாந்தம் 14000 ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். அப்படியென்றால் நாளொன்றுக்கு 700 ரூபாவை பெறுகின்றனர். ஆனால் 4 பேர் வசகிக்கும் ஒரு குடும்பத்தில் 50 தொடக்கம் 55000 ரூபா வரை அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல தேவைப்படுவதாக புள்ளி விபரம் கூறுகிறது.

இந்த நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாளொன்றுக்கு 1500 ரூபாவை சம்பளமாக வழங்க உறுதி வழங்குகின்றேன். இன்று 350 ரூபாய்க்கு உரம் வழங்குவதாக எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் விவசாயிகளை வெவ்வேறாக பிரிக்காது அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகவே உரங்களை வழங்குவேன்.

எனக்கு விவசாயிகளை பிரித்து பார்க்க முடியாது. தேயிலை துறையை முழுமையாக அபிவிருத்தி செய்வேன். பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பகல் உணவும் சீருடைகள் இரட்டிப்பாக வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொழில் பயிற்சி நிலையங்கபளில் டிஜிட்டல் கணணி மயமாக்கம் ஆங்கில அறிவு மத்திய நிலையம் என உருவாக்குவேன். இந்த சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக ஜனசவிய என்ற உதவியும் வழங்கப்படும்.

எறும்பை போல் என்னோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு நான் ஆதரவை வழங்குவேன். குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க போவதில்லை - என்றார்.

No comments