யாழில் ரீல் விட்ட பிரதமர்

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு சம்பவமாகத் தான் விசாரணைகளை நடத்த வேண்டும். விரைவில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதமரின் செய்திளார் சந்திப்பு ஒன்று நேற்று (17) மாலை இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை, கொல்லப்பட்ட கடத்தப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் காட்டப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகின்றது என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர்,

முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ்சின் கொலை தொர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கொலை தொடர்பில் நடந்த விசாரணைகளில் ஏற்பட்ட திருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொல்லப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்துவோம்.

இந்த ஆட்சியின் போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு சம்பவங்மாகத் தான் விசாரணைகளை நடத்த வேண்டும். முழு பொலிஸாரையையும் இந்த விசாரணைகளுக்காக ஈடுபடுத்த முடியாது உள்ளது - என்றார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்,

குறிப்பாக கடத்தப்பட்டு உயிரிருடன் மீண்ட உயிருள்ள சாட்சியாக தமிழ் ஊடகவியலாளர்கள் இருக்கும் போதிலும், அரசியல் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த முடியாமல் உள்ளதற்கு என்ன காரணம் வினாவினார்.

இதன்கு பதிலளித்த பிரதமர்,

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முழுமையான துரித விசாரணைகளை நடத்துவோம். முதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை ஆரம்பிப்போம் - என்றார்.

No comments