முல்லையில் மனிதப் புதைகுழியா? மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண் எடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் இன்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள எலும்புக்கூடு எச்சங்களை மீட்பதற்கு நாளை (21.10.19) நீதிமன்ற உத்தரவு பெற்று நீதிபதி மற்றும் தடயவியல் பொலிசார் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கவுள்ளனர்.

No comments