புலித் தொடர்பு: கைதானவர்கள் இன்று நீதிமன்றுக்கு

விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க உதவிய குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்றும் எதிர்வரும் வியாழக்கிழமையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் அண்மையில் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை,  சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பிரதானி அயோப் கான் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில்  கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களே இன்று  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை  குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சந்தேகநபர்கள் தொடர்பாக  நீதிமன்றத்தில்  முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments