கேலிக்குரியதாகும் இலங்கை சட்டத்துறை?



சிறீ லங்கா சட்டத்தரணிகள் சங்கமும் மற்றுமோர் இனவாதக் கோட்டையாக மாறி விட்டதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அண்மைக் காலக் குண்டு வெடிப்புக்களின் பின்னர், இஸ்லாமிய மக்கள் சார்பில் நீதி மன்றத்தில் தோற்ற ஒரு சார் சிங்கள தேரவாத பௌத்தச் சட்டத்தரணிகள் மறுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதைவிட, முல்லைத்தீவில் அண்மையில் பௌத்த தேரின் உடல் நீதி மன்றக் கட்டளைக்கு முரணான விதத்தில் எரிக்கப்பட்டது தொடர்பாக முல்லைத் தீவுச் சட்டத்தரணிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகக் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சிறீ லங்கா சட்த்தரணிகள் சங்கக் கூட்டத்தில், ஒரு சார் சிங்கள தேரவாத பௌத்தச் சட்டத்தரணிகள் ஆவேசமாகப் பொங்கி எழுந்து பெரும் கண்டனக் குரல்களை எழுப்பி, கூட்டத்தினையே குழப்பியதாகப் பேசப்படுறது.

இதைவிட, கோட்டாவின் வழக்குத் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, நீதி மன்றத்தினுள் ஒரு சார் சிங்கள தேரவாத பௌத்தச் சட்டத்தரணிகள் பெரும் ஆர்ப்பரப்புச் செய்து, நீதி மன்றத்தினை அவமதிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவைகள், யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என இலங்கையில் சிங்கள தேரவாத பௌத்தம் மற்றுமொரு தடவை கோரத் தாண்டவம் ஆட இருப்பதைத்தான் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி ஒரு சார் சிங்களவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதனிடையே சட்டத்தரணிகளாக கறுப்புடையை மாட்டிய நிலையில் மேற்கொள்ளும் கீழ்த்தரமான செயலைக் கண்டித.த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கொதகொட தெரிவித்தார்.
கோட்டாபாய ராயபக்சாவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று மாலை 6மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது. இதன்போது நீதிய்சர் தீர்ப்பை வாசித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றேன் எனத் தெரிவித்த சமயம் சட்டத்தரணிகளும் அவர்கள் திசையில் இருந்த எதிராளியின் ஆதரவாளர்களும் கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர். இதன்போதே நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது நீதியரசர் மேலும் தெரிவிக்கையில் கறுப்பு உடைபோட்டுக்கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுவது சட்டத்துறைக்கு அவமானமான செயல் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனத் தெரிவித்தார். இதன்போது எதிராளி சார்பில் ஆயரான சட்டத்தரணிகளில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அரச தலைவர் சட்டத்தரணியுமான ரொமேஸ்டீ சில்வா இதன்போது மன்றில் மன்னிப்பு கோரினார். இதன்போது நீதியரசர் இவ்வாறு மன்றை அவமதிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டு எனச் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி நான் உங்களைப் பார்த்து இருக்கின்றேன் எனக்கு யார் கூ அடித்தது எனத் தெரியாது எனப் பதிலளித்தார்.

இதன்போது மீண்டும் கருத்துரைத்த நீதியரசர் இது ஓர் கீழ்த்தரமானதும் மனவருத்தம் அளிக்கும் ஓர் நடத்தை நான் நினைக்கின்றேன் .சட்டத்தரணிகள் யாரும் இதில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என அவ்வாறு ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனத்தெரிவித்தார்

No comments