நாட்டையும், மதத்தையும் மீட்க நான் தயார் - கோத்தா

நாட்டையும், மதத்தையும், தேசியத்தையும் மீட்பதற்கு அவசியமான அனைத்து பிரயத்தனங்களையும் மேற்கொள்ள தாம் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலையில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

பௌத்த மதத்தின் காரணமாக ஏனைய அனைத்து சமயங்களை பின்பற்றுவதற்கு இலகுவான நாடு இலங்கை என கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பௌத்த மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கான பணிகள் தமது அரசாங்கத்தின்கீழ் அதேமுறையில் இடம்பெறும் என்றும் நான் உறுதியளிக்கிறேன் - என்றார்.

No comments