விபத்தில் பலர் படுகாயம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று (06) காலை வேளையில் தனியார் பஸ் கனரக வாகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் காயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த தனியார் பஸ் தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கள் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனரக வாகத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றன.

No comments