என்ன செய்ய?ஆராய்கின்றது பேரவை!

தமிழ்மக்கள் பேரவையால் தொடங்கப்பட்ட சுயாதீனக் குழு வட- கிழக்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகப் பொது அமைப்புக்களின் கருத்தறிவதே மேற்படி சந்திப்புக்களின் நோக்கமாகும்.
இச்சந்திப்புக்கள் நாளை வெள்ளிக்கிழமை(25)மாலை- 05 மணியளவில் திருகோணமலை உப்புவெளியிலுள்ள மேய்ப்பு பணி நிலையத்திலும் (Pastoral Centre), நாளை மறுதினம் சனிக்கிழமை(26) மாலை- 04 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இல- 61, பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியிலுள்ள பேரவை அலுவலகத்திலும் நடைபெறுமென தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

No comments