எதற்காக அழைப்பு:திரிசங்கு நிலையில் பிரபலங்கள்?


எதற்காக விசாரணைக்கு அழைக்கப்படுகின்றோம் என்பதே தெரியாத நிலையில் முல்லைதீவிலிருந்து அரசியல் செயற்பாட்டளர்கள் பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுவருகின்றனர்.
அவர்களிற்கான அழைப்பாணையினை அனுப்பி வரும் காவல்துறையினர் கொழும்பு உத்தரவிலேயே இவ்வறினை விநியோகித்துவருவதாகவும் தெரிவித்துவருகின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் அவர்களையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் அவர்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று நேற்றைய தினம்(22) அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை கையளித்து சென்றுள்ளனர்
குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜனமே ஜெயந்த் அவர்களை 25.10. 2019 காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி ,புதிய செயலக கட்டடம் ,கொழும்பு__1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு 01 இன் பொறுப்பதிகாரி அவர்களை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
குறித்த விசாரணை தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் அவர்கள் எதற்காக தான் அழைக்கப்பட்டு இருக்கிறேன் என்பது தொடர்பாக தெரியாது எனவும் இது தொடர்பாக கோரிய போது இது தொடர்பான தகவல்களை அறிய முடியாது இருப்பதாகவும் தெரிவித்தார்
அத்தோடு குறித்த விசாரணையை எமது பகுதிக்கு அண்மையில் நடத்தாது கொழும்புக்கு எம்மை அழைத்து செலவுகளையும் மனரீதியான உளைச்சலையும் ஏற்படுத்துகிறார்கள் தவிர நாம் எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் விசாரிப்பதாக இருந்தால் எமது பகுதிக்கு அண்மையில் விசாரிக்க முடியும் எனவும் எதிர்காலத்தில் எம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு செய்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
இதேவேளை முள்ளிவாய்க்காலில் கடந்த மே மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின்ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது
எனவே இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது போன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளரும் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இது தொடர்பாக எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments