ஆட்களை போட சித்தார்த்தனிடம் உதவி கேட்ட சுமந்திரன்?


தேர்தல் காலத்தில் இரண்டொருவரை போடவேண்டியுள்ளது.உங்கள் தரப்பு இன்னமும் ஆயுதங்களை மௌனிக்காமையால் அதற்கு உதவவேண்டுமென சித்தார்த்தனிடம் கோரிக்கைவிடுத்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று ரணில் பங்கெடுக்கும் நிகழ்வொன்று யாழில் நடைபெற்றிருந்தது.நிகழ்வில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் யாழில் செயற்படும் டாண் தொலைக்காட்சி கோத்தபாயவின் தரகு தொலைக்காட்சியாக செயற்படுவதாக செய்தியாளர்களிடையே நையாண்டி செய்திருந்தார்.அதுவும் அத்தொலைக்காட்சியால் நேரடி அஞ்சல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த சுமந்திரன் அங்கே நின்றிருந்த சித்தார்த்தனை பார்த்து நீங்கள் இன்னமும் ஆயுதங்களை மௌனிக்கவில்லை தானே.இரண்டு மூன்று பேரை போடுவதற்கு உதவ முடியுமாவென சிரிப்புடன் கேள்வி எழுப்பினார்.

ஊடகவியலாளர் தராகி சிவராமை கொலை செய்தது புளொட் அமைப்பென்பது தெரிந்தே டாண் செய்தியாளர்கள் முன்னிலையில் மீண்டும் புளொட் உதவி கேட்டமை பேசுபொருளாகியிருந்தது. 

No comments